மாவீரர் நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் குருதிக் கொடை

தமிழ் மக்களுக்காக அவர்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைந்து அவர்களுக்கான அஞ்சலி நாளில் பிரித்தானிய புலம் பெயர் தமிழ் இளைஞர்களால் குருதிக்கொடை வழங்கப்பட்டுள்ளது. மாவீரர் நினைவு நாளாகிய இன்று பிரித்தானியாவின் Edgware நகரிலுள்ள குருதிக்கொடை நிலையத்தில் தன்னார்வமாக திரண்ட புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமது குருதியை கொடையாக வழங்கி மாவீரர்களுக்கான தமது அஞ்சலிகளை செலுத்தினர்.